முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

SCHOOL HOME WORK செய்யலயாம். என் மனைவி மகனுக்காக உதிர்த்த பொன்மொழிகள் ...

Subbiahpatturajan

SCHOOL HOME WORK செய்யலயாம்.  என் மனைவி மகனுக்காக உதிர்த்த பொன்மொழிகள் ...
1.படிக்கலேன்னா உருப்படாம தான் போய்டுவ.

2.உழைக்கலேன்னா பிச்சைதான் எடுக்க போகணும் 
3.பணம் இல்லாட்டி ஒரு நாய் கூட   உன்னை மதிக்காது.
4.நீ எல்லாம் எச்சில் இலை எடுக்கவும் எச்சில் தட்டு கழுவவும் தான் லாயக்கு.
5.இந்த வாட்டி பரிட்சைல பாஸாகலேன்னா ஸ்ரெய்ட்டா எருமை மாடு மேய்க்கதான் உன்னை அனுப்ப போறேன்.
( எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான வேலையா ?)
6.காசு பணம் இல்லன்னா சொந்தக்காரங்க மதிக்க மாட்டாங்க.
(எல்லா உறவுகளுமே அப்படித்தான் இருக்கிறார்களா?)
7.அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் நீ பிச்சைதான் எடுக்கப் போற.
8.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.
9.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ?
10.உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சிதான் போகப் போற.

சொல்ல வேண்டியவை :

1.படிச்சா நல்லா வாழலாம்.படிச்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலாம்.
2.உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்.
3.நிறைய பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.
4.படிச்சி முன்னுக்கு வந்து விட்டால் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம்.
5.நீ இந்த பரிட்சைலயும் பாஸாய்டுவ.
எல்லா பரிட்சைலயும் பாஸாய்டுவ எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை இருக்கு.நீ நல்லபடியா மேல வரமுடியும்.
6.காசு பணம் வந்ததுக்கு பிறகும் எல்லா உறவுகளையும் ஒரே மாதிரி மதிப்பா நடத்தனும்.
7.அப்பா அம்மா நான் சாதிச்சிட்டேன் 
என்று சொல்லனும்.
8.படித்து ஊர் மெச்ச வாழும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பட்டியலை பிள்ளைகளிடம் காட்டுங்கள்.
9.உழைப்பின் மூலமாக வரும் பணத்தின் மதிப்பை புரிய வைக்க வேண்டும்.
10.உன்னோட திறமைக்கு நீ ரொம்ப சீக்கிரமா முன்னுக்கு வர முடியும்.

சொல்ல கூடாதவை.சொல்ல வேண்டியவை வரிசை எண்படி ஒவ்வொன்றையும் பொருத்தி ஒரு முறை படிக்கவும்.
சொல்ல கூடாதவை பட்டியலில் உள்ள வாசகங்களை அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் உச்சரிக்கப்படுவதை நாம் கேட்கிறோம்.
ஏன் சார் இப்படி என்றால் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான்
நான் இப்படி பேசுகிறேன் என்ற பதில் கிடைக்கிறது.
ஆனால் எப்படி ஆகக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ அப்படி ஆகி நின்ற பிறகுதான் நாம் எங்கே என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க தொடங்குகிறோம்.
எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை விட எப்படி ஆகக் கூடாது என்று அதிகமாக நினைப்பதால் மற்றவர்களை அவ்விதம் ஆகி விடக்கூடாது என்று அறிவுறுத்தும் விஷயம் மட்டுமே நடந்து முடிந்து விடுகிறது.
எந்த விஷயத்தை இது நடக்கக் கூடாது என்று பய உணர்வுடன் சிந்திக்கிறோமோ அந்த பய உணர்வு ஆழ்மனதில் நடக்க விரும்பாத விஷயத்தை ஆழமாக பதியும்படி செய்து விடுகிறது.
பெரும்பாலான பிள்ளைகள் தேர்வுகளில் தோற்பதற்கு படிக்கிலன்னா நீ உருப்பட மாட்ட என்ற பெற்றோரின் தொடர்ச்சியான மிரட்டல் நான் உருப்படாமல் போய் விடுவேனா என்ற அச்ச உணர்வை பிள்ளைகளின் ஆழ்மனதில் ஆழமான எண்ணமாக பதிந்து அப்படியே அவர்கள் உருப்படாமல் போய் விடுகிறார்கள்.
படிப்பு மட்டுமல்ல வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான விளைவுகளை உதாரணம் காட்டாமல் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் இருந்து கிடைக்க இருக்கும் நற்பலன்களை திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறுவதன் மூலமாக பிள்ளைகள் நல்ல மன வலிமையையும் நம்பிக்கையும் அடைவார்கள்.
உன்னால் முடியும்.எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.நீ திறமைசாலி உனக்கு அது மிகவும் எளிதான விஷயம்.இதை செய்வதன் மூலமாக நீ வெற்றி பெற முடியும் உனக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.சமூகத்தில் நீ பெரிய புகழுடன் வாழ அற்புதமான வாய்ப்பு உனக்காக காத்திருக்கிறது.
இது போன்ற வாக்கியங்கள் அறிவுரை கூறுபவர் பெறுபவர் இருவருக்கும் நல்ல நம்பிக்கையும்  சாதனை செய்ய உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வாக்கியங்கள் ஆகும்.
நம்முள் நினைக்கும் எண்ணங்களையும் பிறரிடம் பேசும் வார்த்தைகளையும் நற் பலன்களை அளிக்கக் கூடிய நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்போம்‌. வார்த்தைகளால் புது வாழ்வை துவக்குவோம்.👍

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...